Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

மாபெரும் தமிழர் பேரணி

கலைஞர் வரவேற்பு


இன்று அதாவது 09.04.2009 அன்று மாபெரும் தமிழர் பேரணிக்கு மூத்த அறிஞர் முதலமைச்சர் கருணாநிதி அழைப்பு விடுத்திருக்கிறார். தமிழர்களாகிய நாம் வரவேற்க வேண்டிய விடயம் ஏனெனில் நம்மில் பலருக்கு எம் உறவுகள் அங்கு விதைக்கபடுகிறதை கேள்வியுற்று மனம் வெறுத்து இருக்கும்போது எம் மனபாரத்தை இறக்கும் ஒரு இடமாக அது திகழும் என்பதால். speed racer games, racer games, speed racer, car games, racing games, play games, free games, online games, fun games, download games, driving games online free
ஆனால், இதில் நாம் எல்லாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால் இவ்வளவு காலமாக எம்மினம் பட்ட துயரங்கள் உலகில் வேறு எந்த இன மக்களும் பட்டிராத சொற்களால் சொல்ல முடியாத துயரங்கள். கொத்தணி குண்டு பாவித்து எரிந்த எம்மினத்தின் மேல் இன்று நச்சு குண்டு கூட போடப்பட்டு அழுகியிருக்கிறது. இந்த நச்சு குண்டை கொடுத்தது இந்தியா என்பதும் தெரிந்தாகிவிட்ட நிலையில் இன்று கலைஞர் இந்த பேரணியை நிகழ்த்துவது ஏன்?

அவ்வளவு ஏன்! இலங்கை போரில் இறந்த 200 இந்திய இராணுவத்தின் உடல்கள் நுங்கம்பாக்கம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பெயர் சொல்ல விரும்பாத பணியாளர் ஒருவர் கூறியுள்ளார். அது மட்டுமல்லாது நந்தம்பாக்கம் இராணுவ வைத்தியசாலையில் காயமடைந்த 120 இராணுவ வீரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிகின்றன. இந்த நிலையில் தமிழ் மக்கள் பேரணி சேப்பாக்கம் வரத்தேவையில்லை. சாஸ்திரிபவன் தான் போய் ஆகணும். அதுவும் தனது கூட்டனி கட்சி ஆட்சியில் இருப்பதால் தாம் ஆட்சியில் இருப்பது போலத்தானே. அப்போ ஏன் பேரணி நடத்தணும்! இலங்கையரசுக்கு உத்யோக பூர்வமாக அறிவிக்கலாம் தானே போரை நிறுத்த சொல்லி.pictures, photos, cool pictures, pics, god pictures, indian god pictures, god pictures, god picture, goddess pictures, pictures of god
அதை விட கொடுமை என்னவென்றால் இந்த பேரணியில் தங்கபாலுவும் கலந்து கொள்வாராம். இதில் எனக்கு எழும் சந்தேகம் என்னவென்றால், எதுக்கு பேரணி செய்றீங்கள்! உண்மையில் இலங்கையில் போர்நிறுத்தம் செய்ய இலங்கையரசை இந்தியரசு வலியுறுத்த வேண்டும் என்று தானே போராட்டம் செய்கிறீர்கள். இந்தியரசே நீங்கள் தானே! பின்னர் எதுக்கு பேரணி! தமிழக மக்களை ஏமாற்றவும் நாளை இலங்கை மக்களுக்காக நாம் பேரணி நடத்தினோம் என்று அறிக்கை விடவும் தானே இப்பேரணி.

இப்படி மக்களை ஏமாற்றும் பேரணியில் விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வது தான் மிகவும் மனவருத்தத்துக்குரியது. கூட்டனியில் இருப்பது கூட சில அரசியல்வாதிகளுக்குள்ள இருக்கவேண்டியதுமான சந்தர்ப்பம் சூழ்நிலைக்கேற்ப மாறும் குணாம்சம் இல்லாதது என்று கூறலாம். ஆனால், தங்கபாலு கலந்து கொள்ளும் இப்பேரணியில் தொல்.திருமாவளவன் கலந்து கொள்வது "யாரை நாம் கேட்கிறோம் போரை நிறுத்த சொல்லி?" என்ற வினாவை தோற்றுவிக்கும் என நான் கருதுகிறேன். மூத்த அரசியல்வாதியான கலைஞர் கூடவா இதை யோசிக்கவில்லை! அல்லது யோசித்துவிட்டு தமிழக மக்கள் இந்தளவுக்கு புத்திசாலிகள் இல்லை என்று மக்களை ஏமாற்றுகிறாரா! அல்லது அவ்வாறு நினைத்து தானே ஏமாறுகிறாரா! wallpapers, cool wallpaper, cartoon wallpaper, download wallpaper, god wallpaper, free wallpaper, indian god wallpapers, desktop wallpaper
எது என்னவோ, மக்களாகிய எமக்கு சிந்திக்கும் உரிமை உண்டு. அந்த சுதந்திரம் கூட இலங்கையில் உள்ள தமிழீழத்தமிழனுக்கு கிடையாது. ஆனால், இந்தியாவில் உள்ள தமிழகத்தமிழனுக்கு உண்டு. சிந்தியுங்கள்!......... செயற்படுங்கள்!....

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: மாபெரும் தமிழர் பேரணி
இன்புட் நல்லாத்தான் இருக்கும் ஆன அவுட்புட் என்னன்னு பொருத்து பார்ப்போம் - chennaitalks
Re: மாபெரும் தமிழர் பேரணி
நீங்க சொல்ல வந்தது என்னவென்று தெளிவாக புரியவில்லை......
Re: மாபெரும் தமிழர் பேரணி
நியாயமான விஷயங்களை சொல்லி இருக்கீங்க,, அதோட விளைவு எப்படி இருக்குன்னு பார்ப்போம் னு சொல்ல வந்தேன்
கைதுறப்பு