Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

பொய் பேசும் இந்தியம்

பொருட்படுத்தாத தமிழ்நாடு












கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் கடற்படை அதிகாரி சுரேஷ் மேத்தா கூறியிருந்தார் இலங்கைக்கு எந்தவித இராணுவ உதவியும் இந்தியா வழங்கவில்லை என்று. இந்தியாவின் அனுமதியில்லாமல் எப்படி இந்திய இராணுவம் இலங்கைக்கு செல்லும்! அதை விட கொடுமை என்னவென்றால் இந்தியா இராணுவத்தை அனுப்பாமல் எப்படி இந்திய இராணுவத்தின் 200 உடல்களை இலங்கை இந்தியாவுக்கு அனுப்பும்? உலகையும் மக்களையும் ஏமாற்றுவதா இந்திய இறையாண்மை.

இந்திய ஆயுதங்களின் தாக்கத்தினால் இன்று தமிழீழ தமிழர்களின் எதிர்கால இளைய சமூகத்தினர் அங்கவீனர்களாக மாற்றப்பட்டுள்ளனர். எதிர்கால சமூகத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்டிருக்கிறது. இவற்றையெல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றி கொண்டிருக்கும் இந்தியரசின் பிரதமர் இதுவரைக்கும் ஒரு பொருட்டுக்காவது இரங்கல் தெரிவித்தாரா! காங்கிரசு கட்சியின் தலைவியாக இருக்கும் சோனியா அம்மையார் இரங்கல் தெரிவித்தாரா!

பெண்களின் மனசு பூ போன்றதாம். பெண்களின் கைவிரல் பட்டு கசங்கிப்போகும் பூ போன்றவர்கள் பெண்கள் என்று வர்ணிக்கப்பட்ட பெண் இன்று 2500 மேற்பட்ட உயிரை பலி எடுத்துக் கூட அனுதாபக் குரல் கொடுக்காமல் கொலை வெறிக்கு ஆதரவுக்கரம் நீட்டுகிறார் என்றால் பெண்ணை பூ என்று வர்ணிக்கும் கவிஞர்கள் தப்பு செய்து விட்டார்களா? அல்லது ஆட்சிலிருக்கும் அந்த அம்மையார் தப்பு செய்கிறாரா?

இந்திய இராணுவத்தின் 200 உடல்களும் யாருக்கும் தெரியாமல் புதைக்கப்பட்டால், இந்தியாவிற்காக தன்னை அர்ப்பணம் செய்த அந்த இராணுவ வீரரிற்கு கிடைக்கும் மரியாதை இதுவா? 3000 இராணுவ வீரர்களை இன்னொரு நாட்டு போருக்கு அனுப்பும் இந்தியாவுக்கு இறையாண்மை என்ற ஒன்று இருக்கிறதா? என்று தான் கேட்க தோணுகிறது.

போர்நிறுத்தத்தை ஏற்படுத்த சொன்னால் இறையாண்மை பாதிக்கப்படும். அதற்கு குரல் கொடுப்பவர்கள் மீது தேசியபாதுகாப்புச்சட்டம் பாய்கிறது. ஆனால், போருக்கு இராணுவத்தை அனுப்பி வைப்பவர்கள் மீதும் அதை இல்லை என்று பொய் பேசுபவர்கள் மீதும் பாய்வதற்கு இந்த நாட்டில் சட்டம் இல்லை என்பதே உண்மை. அதாவது நீதிகள் எல்லாம் புதைக்கப்பட்டு அநீதி தான் நாட்டை ஆளுகிறது என்பது தான் உண்மை. தமிழனுக்கு அநீதி இழைக்கும் போது அந்த அநீதியை தட்டிக்கேட்காது அநீதியுடன் கூடவே சேர்ந்து தன் இனத்திற்கு அநீதி இழைக்கிறது தமிழ்நாட்டு அரசாங்கமும்.

தன் இனம் அழிய தன் இனமே தட்டி கொடுக்கிறது எதற்காக ஒரு நாற்காலிக்காகவே தவிர நீதிக்காக அல்ல என்பதை உலகம் உணர்ந்து கொள்ளும் நாள் நெருங்கிவருகிறது. அதன் பலாபலன்களை சம்மந்தப்பட்டவர்கள் வெகுவிரைவில் அனுபவிப்பார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

குறிச்சொற்கள்:
கைதுறப்பு