Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

அரிசிக்கு வரிசை

கையேந்தும் தமிழினம்














அன்பார்ந்த தமிழ் உறவுகளே! மேலுள்ள படத்தை பாருங்கள். 1/2கிலோ பருப்புக்கும் அரிசிக்கும் இன்னொருவனிடம் கைநீட்டி நிற்கிறது எம் இனம். ஏன் எம்மிடம் பணம் இல்லையா? வளம் இல்லையா? எல்லாம் இருந்து இன்று அந்நியனிடம் கைநீட்ட வைத்துவிட்டது இனவாத அரசாங்கம்.

எல்லாவிதத்திலும் முன்னேற்றம் கண்ட எம் இனம், ஏன்? கல்வி வளர்ச்சி அவ்வளவாக வளராத காலத்திலேயே இலங்கையில் 98% மருத்துவத்துறையில் முன்னேற்றம் கண்டது எம் தமிழினம். அப்படியான இனத்திற்கு இன்று மருத்துவம் பார்க்க இந்தியாவில் இருந்து மருத்துவர்கள் அனுப்ப போகிறார்களாம். உண்மையில் இது எம்மினத்துக்கு என்று சொல்லி இந்தியா தன் அரசியல் நட்புக்குத்தான் அந்த மருத்துவர்களை அனுப்புகிறது.

எனக்கு என்ன கவலை என்றால் இந்தியாவில் உள்ளவர்கள் சொல்கிறார்கள் அங்குள்ள மக்களுக்கு உணவு உடை சேகரித்து கொடுப்போம் கொடுக்கிறோம் கொடுத்தோம் என்று. ஏன் அவர்கள் உங்கள் உணவுக்காகவும்,உடைக்காகவுமா இன்று அவ்வாறு இருக்கிறார்கள். உங்கள் ஆயுதம் விற்பனையாவதற்காகவும் உங்கள் நாட்டின் இறையாண்மை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் உங்கள் நாட்டிற்கு எதிர்காலத்தில் பிரச்சனை வந்திரக்கூடாது என்பதற்காகவும் எம் இனத்தை அழித்துக் கொண்டிருக்கும் இந்தியரசு செய்யும் போது என் இனத்தை கொச்சைப் படுத்திறமாதிரி நான் உணர்கிறேன்.

எனது இந்த எண்ணம் எந்தளவுக்கு நல்லது? அல்லது கெட்டது? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனக்கு அவ்வாறு சிந்திக்க தோண்றுகிறது. இந்தியா செய்வது "பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிற மாதிரி போல" தான் தென்படுகிறது. ஆயுதத்தை கொடுத்து யுத்தம் செய் என்று ஒருபுறமும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்று உணவு உடை ஒருபுறமுமாக இரட்டை வேடம் தாங்குகிறது. இது எந்த விதத்தில் நீதியாக தோண்றுகிறது?


குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: அரிசிக்கு வரிசை
hi syster ur Artical which was made me as heard feeling . i can't imagine any thing that held in Vanni ok any way cngratulation ur sketch imagine, i bless u to ur success. மின்னஞ்சல் மூலம் வந்த கருத்துரை.
கைதுறப்பு