இன்று செய்தி படித்த எல்லோரும் அறிந்த ஒரு விடயம் இலங்கையில் இனவெறி ஆட்சியில் இராணுவத்தளபதியாக இருக்கும் சரத்பொன்சேகா என்ற கொலைகாரன் சொல்லியிருக்கிறார்."விடுதலைப்புலிகள் தென்னிந்தியா மீது தாக்குதல் நடத்த கூடும்"என்று. எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயம்.
தன் தாய் உறவுகளுக்காக தமிழகம் கொந்தளிச்சு எழுந்ததை கண்ட சிங்கள கொலைகாரர்களுக்கு பயம் வந்ததன் விளைவு தான் இது. தம் உடல்பசிக்கு இரை இல்லாமல் போய்விடுமே என்று தான். எம் பள்ளி சிறார்களை, பருவ மங்கையர்களை இரையாக்கி கொண்டிருந்த இராணுவத்தளபதிக்கு ஒன்றுமில்லாமல் போய்விடும் என்ற ஆதங்கமும் வெகு விரைவில் அமெரிக்காவில் கம்பி எண்ணவேண்டி வந்து விடுமோ என்ற ஐயமுமே இதற்கு காரணம்.
விடுதலைப்புலிகள் ஏன் தென்னிந்தியாவில் தாக்குதல் நடத்தவேண்டும்?.. விடுதலைப்புலிகளுக்கு தேவை தமிழீழம் தானே தவிர இந்தியா அல்ல. எம் உறவுகள் எம் நாட்டில் எம் தலைவரின் கீழ் வாழவேண்டும் என்பதே தமிழர்கள் எல்லோரினது ஆசை. மத்தியரசாங்கம் தமிழருக்கு செய்து வருகின்ற துரோகம் வெளிவந்த நிலையில் ஒன்றும் செய்ய முடியாத சிங்களமும் மத்தியரசும் தமிழக மக்களையும் தமிழீழ மக்களையும் குழப்பிவிட்டு உறவுகளுக்கிடையில் பிரச்சனையை தோற்றுவிக்கிறது.
எனவே,இனவாத அரசாங்கத்தை பயங்கரவாதிகள் என்று உலகம் அறிந்து வருகின்றது. வெகு விரைவில் பயங்கரவாதிகளாக ராஜபக்ச குடும்பம் அறிவிக்கப்படும். உலக நாடுகளின் அங்கீகாரத்துடன் தமிழீழம் மலரும். தமிழ் மக்கள் அனைவரும் நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்