தமிழீழத்தில் வாழ்ந்து வருகின்ற எம் இனத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்ட சிங்கள இனவாதிகள் அரைவாசி மக்களை அழித்தும் கைகள்,கால்கள் இல்லாமல் ஊனமாக்கியும் தமிழினத்தை கொச்சைப்படுத்தி விட்டனர். இதை எல்லாம் கண்காட்சியாக நினைத்து பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் உலகமும் அதற்கு காரணகர்த்தாவாக திகழும் முரளிதரன் என்கிற பாராளுமன்ற உறுப்பினரும் உண்மையில் மனிதாபிமானம் உள்ளவர்களா?
உன் பதவிக்காக உன் இனத்தையே அழிக்கிறாயே! உன்னை முரளிதரன் என்று சொன்னால் யாராவது இனம் கண்டு கொள்வார்களா?... கருணா என்று உலகே அறிய உன்னை உயர்ந்தவனாக்கியது சிங்கள இனவாதிகளின் பதவியா? திண்ட வீட்டுக்கு மண் அள்ளிப்போட்ட நீ சுதந்திராமாக வாழுவியா? .. தமிழன் என்ற ஒரு இனம் உலகில் இருக்கும் மட்டும் சுதந்திரம் என்பது உனக்கு எட்டாக்கனியாகவே இருக்கும் புரிந்துகொள்.
உன்னை மாமா,அண்ணா,தம்பி, பிள்ளை என்று அழைத்து உணவூட்டிய உன் உறவுகள் சாப்பிடாமல் உன்னுடைய பலத்தையும் வழிகாட்டலையும் வைத்து சிங்கள இனம் செய்யும் இனசுத்திகரிப்பில் குடல் வெளியில் வந்து தமிழீழ மண்ணிலேயே இரையாகியிருப்பதை பார்த்து மனம் வருந்தவில்லையா?
சிங்கள இனவாதிகளுடன் சேர்ந்தவுடன் தமிழனுக்கேயான இரக்க குணம் எங்கே போனது? இன்று ஒவ்வொரு நாளும் நூறுக்கு குறையாது எம் உறவுகள் அழியும் வேளையில் அழிக்கும் இனத்தின் பதவியில் இருப்பது தமிழனுக்கு அழகான செயலா? நான் தமிழன் அல்ல தமிழினத்துரோகி என்கிறியா?.. விடை கூறு.
இன்று உன் தங்கைக்கு செய்யும் கருத்தடை சிகிச்சை நாளை உன் பிள்ளைக்கு என்பதை நீ நினைக்கவில்லையா? தமிழனின் பிணத்திலே ஒரு தமிழன் பதவியை அனுபவிக்கிறான் என்று வரலாறு சொல்லும் போது அது தமிழினத்திற்கு ஏற்பட்ட வடு ஆகாதா? பதவிக்காக பெற்ற தாயை விற்கும் ஒரு கேவலமான ஒருதன் தமிழினத்தில் வாழ்ந்தான் என்று உலகம் உன் மேல் எச்சில் துப்பும் போது அதை அருந்த நீ தயாரா?
பதவிக்கு பறிபோன தமிழனாலேயே இன்று எம் இனம் அழிகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை. காலாகாலமாக தமிழன் ஆண்ட தமிழீழத்தை என்றுமே இல்லாதவாறு வித்தியாசமான போக்கில் படைகளை நகர்த்தி நிலங்களை ஆக்கிரமித்தது மட்டுமன்றி மக்களை கொல்லவும் துணிந்தது எப்படி? என்றுமில்லாத துணிவு இப்பொழுது எப்படி வந்தது சிங்கள இனவாதிகளுக்கு?... பதில் சொல்லும் தருணத்தில் முரளிதரன் இருந்தாலும் அவனை கேள்வி கேட்கும் உரிமை தமிழர்களுக்கு இல்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவன் தமிழன் இல்லையே? இது பற்றி உறவுகளின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நினைவேறுகிறது…