Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

மகராசி மௌனம்

மக்கள் கொந்தளிப்பு


ரே கொந்தளிச்சு உலகமே திரண்டு வந்தும் இன்னும் ஊருக்குள் இருக்கும் நமக்கு ஒன்றுமே தெரியாத மாதிரி மௌனமாக உட்காந்திருக்கிறார் புரட்சித்தலைவி. தமிழினத்துக்காக தன் உயிரையே விடும் புரட்சித்தலைவரின் பெயரை வைத்து இன்றுவரை ஆட்சி செய்து வருகிறார் என்று தான் சொல்ல முடிகிறது.

காலையில் நான் வரும் போது வீதியோரம் முழுவதும் ஒரே கொடிகளும் பெரிய படங்களும்(வினையில் போர்ட்)ஆக காட்சி தந்தது. எனக்கு எம்.ஜி.ஆர் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் அதை பார்த்தேன். ஆனால் பக்கத்தில் புரட்சித்தலைவி என்று பெயர் போட்டிருந்தது. எனக்கு பார்க்கும் போது கோவம் வந்தது.

தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகள்(வோர்ட்)வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் பயங்கரவாதிகள். எப்படி!..இப்படி? அது ஏன்? இன்று ஈழத்தில், உலகில் ஒரு இனமும் படாத ஒரு துன்பத்தை எம் இனம் அனுபவித்து வருகிறது. அப்படி இருக்கும் போது "யுத்தம் என்றால் மக்களுக்கு இழப்பு வரும்தான்" என்று சொல்வதற்கு சொல்லும்போது மனிதன் என்ற மனிதநேயம் கொஞ்சமும் நெஞ்சில் இருக்காதா?

எங்கள் இனம் இல்லை என்று தெரிகிறது ஏனென்றால் தமிழனுக்கு உணர்வு இருக்கு நாட்டு மக்கள் மீது பற்று இருக்கு நாட்டின் மீது பற்று இருக்கு. என்றாலும் மனிதநேயம் கூடவா இல்லை!.. எம்ஜிஆர் எனும் மாமனிதனின் பெயரிற்குள்ள மரியாதை வரும் கால எம் சந்ததியினருக்கு போய்ச்சேருமா! என்ற ஆதங்கம் எனக்கு ஏற்படுகிறது.

இப்படி ஒரு தலைவி இருக்கிறார், என்பதையே மறந்துவிட்டேன். நேற்று செய்தி படிக்கும்போது தான் அதிமுக தொண்டர் ஒருவர் கட்சி சம்மந்தப்பட்டது எதையோ தீயில் எரித்திருக்கிறார்.ஏன் என்றால் ஈழத்தமிழருக்காக தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் கண்டனமும் கவலையும் தெரிவித்தும் கூட தன் கட்சியிலிருந்து இன்னும் ஒரு ஆறுதல் வார்த்தை கூட வரவில்லை என்ற ஆத்திரத்தில் இவ்வாறு எரித்தாராம்.

அப்போது தான் நினைவுக்கு வந்தது எம்ஜிஆரிற்காக தான் மக்கள் ஆதரவளிக்கிறார்கள் என்று. எப்படியோ மனசுவருது இருக்கிறாங்க போகட்டும் நமக்கென்ன அவங்களுக்கு தானே நஷ்டம். மக்களே! நீங்க என்ன சொல்றீங்க?....



குறிச்சொற்கள்:
கைதுறப்பு