![]()
மலையாள மைந்தனாம் எம்ஜிஆர்
மலையாக உயந்தார் - தமிழகத்தில்
தாராள மனம் படைத்தார்
தயாளராக உருவெடுத்தார்..
மூன்றெழுத்தை மூவுலகம்
மூச்சுபோல் சுவாசிக்க
உத்தமராய் உயர்ந்து
அறிவுப் பசி தீர்த்திட்டார்.
பட்டம் பெறுவது பகட்டுக்கே - மக்கள்
பரிதாபம் தீர்ப்பதே படிப்பு
கல்வி கற்பது பாடசாலையில் மட்டுமல்ல
கல்வி என்பது கற்பதற்கு மட்டுமல்ல
கல்வி கல் கற்றதை கொண்டு மக்கள்
கல்லாமை தீர் என்றார்.
ஏழைகளின் நண்பனே! எம்
மக்களின் எம்ஜிஆர்.
ஏழ்மையை போக்கி தமிழரை
ஏணியில் ஏறவைத்தீர்.
தமிழீழ மக்களின் உணவு பசி தீர்த்திட
விமான உணவு கொடுத்தார்.
உணர்வு பசி தீர்க்க
உளமார வாழ்த்தினார்.
எல்லோரையும் வாழ்த்தி
எல்லோரையும் வாழ வைத்த - உங்கள்
மனம் படைத்த மனிதன் இன்று இல்லை என
மன வேதனையுடன் காத்திருக்கும்
நல் உள்ளங்களுக்கு பிறந்த தினம் தான்
நலமான பரிசாக நாளும் நீடிக்கிறது.
உங்கள் பிறந்த நாள்
உலகம் போற்றும் உத்தம நாளாக
உண்மைத் தமிழரின் உணர்வு நாளாக
ஊற்றெடுக்க வாழ்த்துகிறேன்...
நினைவேறுகிறது…
மறுமொழிகள்