உலகத்தில் தமிழன் இல்லாத ஒரு நாடு இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா இடங்களிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக எம் இனம் அலைந்து வருகிறது. எம் இனம் இவ்வாறு சொந்தம் பந்தம் இல்லாது உருக்குலைந்து வாழ்வதற்கு ஆட்சி வெறிபிடித்த எம் தமிழ் தலைவர்களும் ஒரு காரணகர்த்தாவாக திகழ்கிறார்கள் என்பது தான் தமிழ் மக்களின் ஆடங்கா ஆதங்கமாக திகழ்கிறது.
எம் இனம் வந்தாரை வாழவைக்கும் தமிழினம் இன்று இருக்க வீடில்லாது உண்ண உணவில்லாது ஆறுதலுக்கு உறவுகள் இல்லாது உணர்வுகளற்ற பிணங்களாக வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று ஈழத்தில் இருக்கும் உறவுகள் நினைக்கலாம் அவர்கள் நினைப்பு ஒன்று தப்பில்லை ஏனெனில் ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைதானே! ஆனாலும், பெரும்பாலான எம் தமிழ் உறவுகள் இன்று என்ன நடந்ததோ!உறவுகள் எங்கு இருக்கிறார்களோ! அவர்களுக்கு என்ன ஆனதோ! என்ற ஏக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.
ஆனால், சில அரசியல் வாதிகள் தமது ஆட்சிக்காக பதவிக்காக தம்மால் முடிந்ததை கூட செய்ய மறுக்கிறார்கள். உள்மனது உறுத்தினாலும் பதவி என்ற ஆசையால் தம் இனத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்கென்ன தோண்றுகின்றது என்றால், எங்கள் தலைவர் இருக்கும் மட்டும் எங்கள் தமிழினத்திற்கு ஒன்றும் ஆகாது. ஆட்சி வெறி பிடித்த தமிழர்களே! நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். ஆட்சியிலிருக்கும் போது என்னென்ன செய்தீர்கள்? என்று எடுத்துக்கூறுவதற்கு எதிர்காலத்தில் ஒரு தமிழினம் வேண்டும் என்று சிந்தித்தீர்களா?
இன்று தமிழினம் அழிந்து கொண்டு போறதற்கு இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுபடைகளான தமிழ் உணர்வில்லா தமிழர்கள் காரணமாக இருந்து தமிழ் இடங்கள் அறியா சிங்கள வெறியர்களுக்கு எம் உறவுகளின் இடங்களை காட்டிக்கொடுத்து உதவுகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்தியாவின் தற்போதைய முதலமைச்சர் கலைஞர் மீது ஈழமக்களுக்கு இருந்த நல் எண்ணம் தற்போது மங்கிக்கொண்டு வருகிறது. ஈழமக்களை காப்பாற்றுவோம், அவர்களுக்காக குரல் கொடுப்போம், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என கொந்தளிச்ச கலைஞர் இன்று பெட்டிப் பாம்பு போல அடங்கியிருப்பதற்கு காரணம் என்ன?
காங்கிரசாரின் எதிர்ப்பு அதனால் பறிபோகும் பதவி. பதவி என்பது பகட்டானது தமிழ் மக்களின் உயிர் காப்பதே உத்தமம் என கலைஞர் நினைத்திருந்தால் இன்று எம் ஈழ உறவுகளின் மனதில் ஒரு நட்சத்திரமாக கலைஞர் மின்னியிருப்பார். இன்று பத்தாவது தடவையாக தலைவர் பொறுப்பு ஏற்கும் கலைஞர் ஒரு தடவை சொன்னார்"என் உயிர் தமிழுக்காகத் தான் பிரியும்" என்று அந்த வாசகத்தை காப்பாரா? எம் தமிழின விடுதலைக்கு கலைஞர் ஒரு ஊன்றுகோலாக திகழ்வாரா! அவரின் பதிலுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஈழத்து உறவுகளில் நானும் ஒருவன்.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்