Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

தமிழனின் அழிவு

ஆட்சி வெறிபிடித்த பித்தர்களால்

உலகத்தில் தமிழன் இல்லாத ஒரு நாடு இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா இடங்களிலும் புலம்பெயர்ந்து அகதிகளாக எம் இனம் அலைந்து வருகிறது. எம் இனம் இவ்வாறு சொந்தம் பந்தம் இல்லாது உருக்குலைந்து வாழ்வதற்கு ஆட்சி வெறிபிடித்த எம் தமிழ் தலைவர்களும் ஒரு காரணகர்த்தாவாக திகழ்கிறார்கள் என்பது தான் தமிழ் மக்களின் ஆடங்கா ஆதங்கமாக திகழ்கிறது.

எம் இனம் வந்தாரை வாழவைக்கும் தமிழினம் இன்று இருக்க வீடில்லாது உண்ண உணவில்லாது ஆறுதலுக்கு உறவுகள் இல்லாது உணர்வுகளற்ற பிணங்களாக வாழ்கிறார்கள். புலம்பெயர்ந்து வாழும் மக்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள் என்று ஈழத்தில் இருக்கும் உறவுகள் நினைக்கலாம் அவர்கள் நினைப்பு ஒன்று தப்பில்லை ஏனெனில் ஜந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லைதானே! ஆனாலும், பெரும்பாலான எம் தமிழ் உறவுகள் இன்று என்ன நடந்ததோ!உறவுகள் எங்கு இருக்கிறார்களோ! அவர்களுக்கு என்ன ஆனதோ! என்ற ஏக்கத்தில் தான் வாழ்கிறார்கள்.

ஆனால், சில அரசியல் வாதிகள் தமது ஆட்சிக்காக பதவிக்காக தம்மால் முடிந்ததை கூட செய்ய மறுக்கிறார்கள். உள்மனது உறுத்தினாலும் பதவி என்ற ஆசையால் தம் இனத்தையே மறந்து விடுகிறார்கள். எனக்கென்ன தோண்றுகின்றது என்றால், எங்கள் தலைவர் இருக்கும் மட்டும் எங்கள் தமிழினத்திற்கு ஒன்றும் ஆகாது. ஆட்சி வெறி பிடித்த தமிழர்களே! நீங்கள் ஆட்சியில் இருந்தீர்கள். ஆட்சியிலிருக்கும் போது என்னென்ன செய்தீர்கள்? என்று எடுத்துக்கூறுவதற்கு எதிர்காலத்தில் ஒரு தமிழினம் வேண்டும் என்று சிந்தித்தீர்களா?

இன்று தமிழினம் அழிந்து கொண்டு போறதற்கு இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுபடைகளான தமிழ் உணர்வில்லா தமிழர்கள் காரணமாக இருந்து தமிழ் இடங்கள் அறியா சிங்கள வெறியர்களுக்கு எம் உறவுகளின் இடங்களை காட்டிக்கொடுத்து உதவுகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்தியாவின் தற்போதைய முதலமைச்சர் கலைஞர் மீது ஈழமக்களுக்கு இருந்த நல் எண்ணம் தற்போது மங்கிக்கொண்டு வருகிறது. ஈழமக்களை காப்பாற்றுவோம், அவர்களுக்காக குரல் கொடுப்போம், இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வோம் என கொந்தளிச்ச கலைஞர் இன்று பெட்டிப் பாம்பு போல அடங்கியிருப்பதற்கு காரணம் என்ன?

காங்கிரசாரின் எதிர்ப்பு அதனால் பறிபோகும் பதவி. பதவி என்பது பகட்டானது தமிழ் மக்களின் உயிர் காப்பதே உத்தமம் என கலைஞர் நினைத்திருந்தால் இன்று எம் ஈழ உறவுகளின் மனதில் ஒரு நட்சத்திரமாக கலைஞர் மின்னியிருப்பார். இன்று பத்தாவது தடவையாக தலைவர் பொறுப்பு ஏற்கும் கலைஞர் ஒரு தடவை சொன்னார்"என் உயிர் தமிழுக்காகத் தான் பிரியும்" என்று அந்த வாசகத்தை காப்பாரா? எம் தமிழின விடுதலைக்கு கலைஞர் ஒரு ஊன்றுகோலாக திகழ்வாரா! அவரின் பதிலுக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஈழத்து உறவுகளில் நானும் ஒருவன்.

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: தமிழனின் அழிவு
இவர்களுக்கு வேறெதையும் விட ஆட்சியும், பதவியும் ரொம்ப முக்கியம்... வயதாகி நடக்கக்கூட நாதியற்று ஆட்சி செய்யும் வெறி மட்டும் அடங்காதவர்களிடம் இவற்றை எதிர்பார்ப்பது தவறு... தமிழுணர்வு, தமிழன் என்பதெல்லாம் இவர்களுக்கு மேடைப் பேச்சுக்கு மட்டுமே! நிலையற்ற மனம் படைத்த நாய்கள்...
Re: தமிழனின் அழிவு
கலைஞர் மூத்த அரசியலாளர் மற்றும் தமிழ் பற்றாளர், இந்த ஒரு விவகாரத்தில் மட்டும் தனது அரசியல் இலாபங்களைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு செயல்பட்டால் கண்டிப்பாக அவரால் குறீப்பிடுமளவு மாற்றம் நிகழ வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கிறேன்.....
Re: தமிழனின் அழிவு
நன்றி;உங்கள் கட்டுரை மிக சிறப்பு; அரசியல்வாதிகளை நம்பினால் நிட்சயமாக எதனையும் ஒரு முடிவுக்குகொண்டு வரமுடியாது எனவே தமிழ்நாட்டு தமிழர்கள் மட்டும் அன்றி உலகில் எங்கும் வாழும் தமிழர்களை உண்மையினை புரிதலுக்கு ஏற்படுதுவதன்மூலமே உலகின் மத்தியில் அழிந்து வரும் எம் தமிழ் மொழியையும் தமிழ் கலச்சாரவிழுமியங்களையும் கட்டிஎழுப்பமுடியும் என நம்புகின்றோம்; நன்றியுடன் :S.Raj
Re: தமிழனின் அழிவு
எம் தமிழ் மக்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள்.. சில சந்தர்ப்பம் சூழ்நிலைகளால் சிலர் மனது தளர்ந்து இருந்தாலும் எம் மக்களின் மனங்களில் ஆழ்ந்து பதிந்திருப்பது தமிழீழம் என்ற கருத்து தான். இது உறுதியானது. அப்படி இருக்கும் பொழுது மனம் தளர்ந்திருக்கும் எம் உறவுகளுக்கு உண்மையினை விளங்க வைக்க வித்தியாசமான சிந்தனைத்துளிகள் உங்களிடம் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.. நானும் கூடவே முயற்சி செய்கிறேன்.. mgr.mywebdunia.com
கைதுறப்பு