Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

கரையாத காவியம்

எம்ஜிஆர் நினைவு



























தமிழக முதலமைச்சராக
தரணிக்கே முதல் மனிதராக
ஏழைகளின் நண்பனாய்
எளிமையாய் வாழ்ந்திட்டீர்...

தமிழக மக்களுக்கு மட்டுமன்றி
தமிழீழ மக்களுக்கும் நற்பணி செய்தீர்கள்
தமிழர்களிற்கு தீர்வு தமிழீழம் என்று -மனம்
தளராது மன்னவனாம் பிரபாகரனை
தட்டி எழுப்பினீர்கள்...

தாய்மொழி மலையாளமானாலும்
தமிழ் மொழியால் உலகை வளைத்தீர்கள் - உங்கள்
தத்துவப் பாடல்கள் தரணியிலே ஆண்டமையால்
தமிழின குழந்தைகள் செம்மையாய் வளர்ந்தன..

தமிழக தலைவராய் மட்டுமல்ல
தமிழ் சினிமாவில் ஆசானாக - தமிழின
உணர்ச்சி ஊற்றாக உருவெடுக்க
மனம் கவரும் பாடல்கள்
மகத்தாக தந்திட்டீர்...

இருபத்தியொரு ஆண்டுகள்
இருளாக கழிந்தாலும்-மக்கள்
மனங்களிலே மக்கள் திலகாமாய்
மங்காமல் இடம் பிடித்தீர்கள்...

உங்களுக்கொரு மகனிருந்தால்
உங்களைப்போல இருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்கும்
தமிழ் இனம் விடுதலை பெற்றிருக்கும்.

ஆண்டுகள் ஆயிரம் தான் ஆனாலும்
உங்கள் நினைவுகள் - தமிழர்
மனங்களில் நிழல்களாக - என்றும்
மழுங்காமல் மரத்திருக்கும் என்பது
உறுதியான உண்மை.



குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: கரையாத காவியம்
arumai
Re: கரையாத காவியம்
வாழ்த்துக்கள். சிறப்பான கவிதை... மேலும் உங்கள் ஆக்கங்கள் சிறப்புப் பெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்.
Re: கரையாத காவியம்
நல்ல மனிதர்.... அவருக்கான நல்ல கவி.... வாழ்க தமிழ்... வாழ்க தமிழ் நெஞ்சங்கள்.....!!!
Re: கரையாத காவியம்
எம்.ஜி.ஆர் பற்றி எழுதின இன்த கவிதை நல்லா இருக்கு இப்படியே நாட்டில் முக்கியமான பலர் பதி கவிதைகள் எழுதுண்க...
Re: கரையாத காவியம்
kavithai sooper !!!
Re: கரையாத காவியம்
Super
கைதுறப்பு