![]()
தமிழக முதலமைச்சராக
தரணிக்கே முதல் மனிதராக
ஏழைகளின் நண்பனாய்
எளிமையாய் வாழ்ந்திட்டீர்...
தமிழக மக்களுக்கு மட்டுமன்றி
தமிழீழ மக்களுக்கும் நற்பணி செய்தீர்கள்
தமிழர்களிற்கு தீர்வு தமிழீழம் என்று -மனம்
தளராது மன்னவனாம் பிரபாகரனை
தட்டி எழுப்பினீர்கள்...
தாய்மொழி மலையாளமானாலும்
தமிழ் மொழியால் உலகை வளைத்தீர்கள் - உங்கள்
தத்துவப் பாடல்கள் தரணியிலே ஆண்டமையால்
தமிழின குழந்தைகள் செம்மையாய் வளர்ந்தன..
தமிழக தலைவராய் மட்டுமல்ல
தமிழ் சினிமாவில் ஆசானாக - தமிழின
உணர்ச்சி ஊற்றாக உருவெடுக்க
மனம் கவரும் பாடல்கள்
மகத்தாக தந்திட்டீர்...
இருபத்தியொரு ஆண்டுகள்
இருளாக கழிந்தாலும்-மக்கள்
மனங்களிலே மக்கள் திலகாமாய்
மங்காமல் இடம் பிடித்தீர்கள்...
உங்களுக்கொரு மகனிருந்தால்
உங்களைப்போல இருந்தால்
தமிழீழம் கிடைத்திருக்கும்
தமிழ் இனம் விடுதலை பெற்றிருக்கும்.
ஆண்டுகள் ஆயிரம் தான் ஆனாலும்
உங்கள் நினைவுகள் - தமிழர்
மனங்களில் நிழல்களாக - என்றும்
மழுங்காமல் மரத்திருக்கும் என்பது
உறுதியான உண்மை.
நினைவேறுகிறது…
மறுமொழிகள்