மக்கள் திலகம் எம்ஜிஆர் மறைந்து 21 வருடங்களாகின்றன. தமிழ் மக்களின் மூச்சுக்காற்றாக திகழ்ந்த எம்ஜிஆர் ஏழைகளின் நண்பனாகவும், அறிவூட்டும் ஆசானாகவும் இருந்து தமிழக மக்களை கவர்ந்த ஒரு உத்தமர். அப்படியான ஒரு உத்தமர் 1987ம் ஆண்டு 12 மாதம் 24ம் திகதி இந்த உலகை விட்டு பிரிந்தார். ஆனாலும், மக்கள் மனதை விட்டு என்றும் அகலமாட்டார்.
கடந்த ஆண்டு எம்ஜிஆரி பேரன் கொடுத்த பேட்டியின் போது எம்ஜிஆர் மாரடைப்பால் தான் இறந்தாரா? என சந்தேகம் எழும்படி பேட்டி கொடுத்திருந்தார். உண்மையில் வியப்படைந்த, வியக்கத்தக்க ஒரு விடயம். எம்ஜிஆர் அப்போலோ மருத்துவ மனையில் இருக்கும் போது எம்ஜிஆரின் சகோதரனான சுகுமாரின் தந்தை அங்கே போயிருக்கிறார். அப்போது எம்ஜிஆர் "என்னைச் சுற்றி நானே ஒரு நெருப்பு வளையம் போட்டு வாழ்ந்து கொண்டிருந்தேன். அந்த வளையத்துக்குள் யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதையெல்லாம்கூட வரையறுத்து வைத்திருந்தேன். ஆனால், அந்த வளையமே இன்றைக்கு என்னை நெருங்கி இழுக்கிறது"என்று சொல்லியிருக்கிறார்.
எம்ஜிஆர் இறந்த அன்று இராமாவரம் தோட்டத்தில் என்ன நடந்தது? "எம்ஜிஆரின் உடல் இருந்த 2வது தளத்திற்கு யாரையும் போக யாருக்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை. வீட்டின் பின் புறத்தில் நின்ற அம்புலன்ஸ் வண்டியினூடாக எம்ஜிஆர் உடல் ராஜாஜி ஹாலுக்கு கொண்டு செல்லப்பட்டதாம்" என்று வாசிக்கும் போதே மனம் பதைபதைத்தது. அனைவரும் நல்லா இருக்கணும் என்ற நல்ல எண்ணத்துடன் வாழ்ந்த மாமனிதருக்கா இந்த நிலை?
ஏன் அந்த நிலை வந்தது? என்று தகவல்களை வைத்து ஆராயும் போது சொத்துக்காக என்று தான் தோணுகிறது. எம்ஜிஆர் சொத்துக்களை அபகரிப்பதற்காக சிலர் செய்த சதி தான் எம்ஜிஆர் பலகையில் வைத்து கால் கை கையிற்றால் கட்டப்பட்ட நிலையில் ராஜாஜி மண்டபத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். மக்களின் மனசில் மவராசனாக திகழ்ந்த எம் மக்கள் திலகத்தின் பிரிவு வாட்டியது போதாது என்றாலும் இறுதி நிகழ்வின் சோகம் துன்பக்கடலுக்குல் மூழ்கடிக்கின்றது.
தமிழ் மக்களே எம்ஜிஆரின் பேரன் சொல்கிறார் "எம்ஜிஆருக்கு 69 வயது வரை இதய நோய் இல்லை. அப்படி இருக்கும் போது எப்படி திடீரென்று மாரடைப்பு வரும்?" என்கிறார். அவரின் கருத்துக்களை அவதானிக்கும் போது, எம்ஜிஆர் இறப்பில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. ஆனால் என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க முடியுமே தவிர உண்மை தெரியவில்லை. தமிழ் நெஞ்சங்களே! உங்கள் எம்ஜிஆருக்கு என்ன நடந்திருக்கும்? என்று உங்களுக்கு தெரியுமா? எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்..
நினைவேறுகிறது…
மறுமொழிகள்