Welcome, Guest   [ Register | Sign In | Take a tour | Adult Filter: On ]

ஏமாறும் தமிழகம்

ஏமாற்றும் மத்தியரசு

மிழீழ மக்களுக்காக தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளும் திரையுலகினரும் ஆதரவுக்குரல் கொடுத்தனர். கடைசியில் மும்பை குண்டு வெடிப்புடன் காணாமல் போனது. கடைசியில் கலைஞர் முன் அறிவித்தபடி அனைத்துக்கட்சிகளும் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தது. கடைசியில் என்ன நடந்தது?

முகர்ஜியை அனுப்புவதற்கு கோயில் மாடு மாதிரி தலையை ஆட்டிவிட்டு வந்திருக்கிறார்கள். முகர்ஜி தினமும் கொழும்புக்கு போகிறார் தானே! அதனால் இதுவரை ஏதேனும் பலன் கிடைத்ததா? பிறகு எப்பிடி திரும்பவும் அவரை அனுப்ப சம்மதிக்கலாம். முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதனால் ஏற்படப்போகும் பலனை இப்போது எல்லாரும் உணர்ந்திருப்பார்கள்.

தமிழன் ஓரு இழிச்சவாயன் என்று இந்தியரசாங்கம் ஊடாக இலங்கையரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. அதனால் தானே சரத்பொன்சேகா என்ற சிங்கள நாய் "கோமாளி" என்று பேசுகிற அளவிற்கு திமிரும் அதிகாரமும் வந்தது. தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை இதைவிட கீழ்தரமாக எப்படி ஒரு அந்நியன் பேசமுடியும்?... இதை கேட்டும் இதுவரை மருத்துவர் இராமதாஸ் மட்டுமே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கொதித்திருக்கிறார்.

செம்மணி படுகுழிக்கு காரணகர்த்தாவாகிய சரத்பொன்சேகாவை ஒரு கேள்வி கூட கேட்காமல் விட்டு வைத்த தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்கும் தமிழ் இனத்திற்கும் இதைவிட ஒரு அவமானம் தேவையா?... தமிழ் சமூகமே! இப்ப ஆவது புரிந்து கொள். இந்திய அரசாங்கம் நாடகம் ஆடுகிறது என்பதை. தமிழினம் புறக்கணிக்கப்படுகிறது, அவமானப்படுத்தப்படுகிறது.

உண்மையில் இலங்கைத் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பதை இலங்கை நாட்டின் இராணுவத்தளபதியின் பேச்சிலிருந்து இந்த உலகமும் உலகமக்களும் நன்கு உணரவேண்டும். தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடவேண்டு. இந்திய அரசாங்கத்தை உதவி செய்யச்சொல்லியும் கேட்க வில்லை உபத்திரம் செய்யாதே என்று தான் கேட்கிறோம். இலங்கை அரசாங்கத்துக்கு இராணுவ ரீதியாக செய்யும் அனைத்து உதவிகளையும் திரும்ப பெற்றாலே போதும் தமிழ் மக்களின் பாதிக்கண் திறப்பதற்கு.

குறிச்சொற்கள்:

மறுமொழிகள்

Re: ஏமாறும் தமிழகம்
tamilnadu statgoverment irukira padiyalu ennapanamudijum
கைதுறப்பு