இலங்கைத்தீவினிலே தமிழீழம் கோரி போராடி வரும் ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் செய்த உதவிகள் அளப்பெரியது.
தற்காலத்தில் விடுதலைப்புலிகள் என்று பெயர் சொன்னால் கூட சட்டவிரோதம் என்று கருதுகிற வல்லரசு நாடான இந்தியாவின் முதலமைச்சராக இருந்தவர் தான் எம்ஜிஆர். அந்த மகான் வளர்த்து விட்ட அ.தி.மு.க கட்சி கூட இன்று காலை ஒரு பேச்சு மாலை ஒரு பேச்சு என்று விடுதலைப்புலிகளிற்கு எதிரியாக செயற்படுகிறது.
ஈழமக்களுக்காக மக்கள் திலகம் செய்த உதவியில் ஒன்றை இந்தியாவின் இன்றைய நிலையில் சொல்லவது சிறந்தது எனக்கருதுகிறேன். (இது விடுதலை எனும் நூலில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதியதிலிருந்து படித்தது.)
ஒரு தடவை சென்னை துறைமுகம் ஊடாக ஆயுதங்கள் பெற முற்பட்ட போது துறைமுகத்திலிருந்து வெளியில் எடுப்பதில் சிக்கல் ஏற்பட அன்ரன் பாலசிங்கமும் பிரபாகரனுமாக இதற்கு ஒரே வழி எம்ஜிஆரின் உதவியை நாடுவதே என்று யோசித்தார்கள்.
எம்ஜிஆரிடம் சென்று சொல்லியிருக்கிறார்கள். எது வித தயக்கமும் இன்றி "இது தானா பிரச்சனை?" என்று கேட்டு துறைமுக சங்க முதலாளியுடன் தொலைபேசியில் பேசி இவர்களிடம் ஒரு சுங்க அதிகாரியின் பெயரையும் கொடுத்து விட்டிருக்கிறார்.
ஒரு வழியாக ஆயுதத்தை பெற்றவுடன் பிரபாகரன் எம்ஜிஆரிற்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா?..ஏ.கே.47 ரக தானியங்கித்துப்பாக்கி. அந்த துப்பாக்கியை சுகயீனம் உற்றிருக்கும் போது தனது தலையணைக்கு கீழ் வைத்திருந்திருக்கிறார்.
இவ்வாறு விடுதலைப்புலிகள் மீது பற்று வைத்திருந்து ஆயுதம் வாங்க உதவிய இந்தியா ஏன் இன்று ஈழத்திற்கு சாதகமாக பேசும்போது கைது செய்கிறது?...
நினைவேறுகிறது…
மறுமொழிகள்