ஈழத்தமிழினம், எம்.ஜி.ஆர்,ராஜிவ்காந்தி, இந்திராகாந்தி,சீக்கியர், அரசியல்
பல ஆண்டுகளிற்கு பிறகு ஒரு உண்மை தெளிவாகிறது,என்ன என்கிறீர்களா? இந்தியாவில் தான் எம்.ஜி.ஆர் பிறந்தார், இருந்தார் என்பது தான். பல நாள் ஏங்கித்தவித்த என் கேள்விக்கு இன்று தான் விடை கிடைத்துள்ளது. திரையுலகிலும் சரி அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் இருக்கும்போது ஈழத்தமிழர்களிற்கு இன்னல்கள் ஏற்படும்போது, தனது திரளான கூட்டத்தோடு கண்டன ஆர்ப்பாட்டங்கள்,போராட்டங்கள் என்று தமிழினத்திற்காக பாடுபட்டதை செவிவழியாக கேட்டு அறிந்தோம்.அது மட்டுமல்லாது என் மனசில் அழியாத சிற்பமாக பதிந்திருப்பது எம் இனம் சாப்பாட்டுக்கு அதாவது உண்ண உணவில்லாது பட்டினியால் வாடும் போது விமானம் மூலம் எம் மக்களிற்கு உணவளித்தார் என்பது தான்.
அந்த உத்தமர் பிறந்த நாடா இன்று ஈழத்தமிழினம் அழிய ஆயுதத்திலிருந்து தொழில்நுட்ப வல்லுனர்கள் வரை கொடுத்து உதவுகிறது. கேட்டால் ஒரு சாட்டு வைத்திருக்கிறார்கள் "ராஜிவ்காந்தி கொலை வழக்கு" அந்த ஒரு சாட்டை வைத்தே ஒரு இனத்தை அழித்து விடலாம் என்று கங்கணம் கட்டி நிக்கிறார்கள் போல. இதை யோசிக்கிறவங்க இந்திராகாந்தி கொலை வழக்கை குற்றம் சாட்டியிருந்தால்!...இன்று சீக்கியர் இனம்?...
சில அரசியல் வாதிகள் மாரித்தவக்கை போல தனியத்தனிய கத்தியிருந்தாலும் அவர்கள் இன்று ஒன்று சேரும் போதுதான் அவர்களின் குரல்களும் எடுபடுகிறது. இன்று தமிழகமே இவ்வாறு ஒருமித்து நிற்பதற்கு அவர்களும் ஒரு காரணம் என்றே கூறலாம்.
இன்று இந்தியாவின் தமிழகமே ஈழத்தமிழனுக்காக திரண்டிருப்பதிலிந்து, உண்மையில் உலக நாடுகள் புரிந்து கொண்டிருக்கும் தமிழன் அனாதை இல்லை அவனுக்கும் அரவணைக்க எம்.ஜி,ஆர் உடைய உறவுகள் இருக்கிறார்கள் என்று. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று சும்மாவா சொன்னாங்க...

நினைவேறுகிறது…
மறுமொழிகள்